மக்காவ் ஓபன் பாட்மின்டனில் காயத்ரி, திரீசா ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
ஒபன் “சூப்பர் 300 பாட்மின்டன் தொடர் மக்காவில் நடக்கிறது. இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனதை பேயின் யின்- ஹூய் ஹசு, ஜி யுன் லின் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-17 என வென்றது.
39 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் கா லாங் அங்கஸ் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
0
Leave a Reply